தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை அறிக்கை தயாரித்துள்ளது.

Coimbatore:

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர நகை உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான மூலதன நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் பங்கேற்று, தங்க விலை உயர்வால் நகை உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.

நிர்வாகிகள் கூறுகையில், எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகை உற்பத்தியாளர்கள் மூலதன பற்றாக்குறை மற்றும் நிதிச் சுமையை சந்தித்து வருகின்றனர். கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு உயர்வுக்கும் வரி விதிக்கப்படுவது தொழில்துறைக்கு கூடுதல் சுமையாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கருத்தில் கொண்டு, மாற்றீடு முறையை அறிமுகப்படுத்துதல், உள்நாட்டு விற்பனைக்கான ஏற்றுமதி விலைப்பட்டியல் முறையை அமல்படுத்துதல், கையிருப்பு மதிப்பு உயர்வை தனி கையிருப்பு கணக்கில் வரவு வைக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மேலும், ICDS விதிகளில் சிறப்பு சலுகைகள் வழங்குதல், குறு மற்றும் சிறு நகை உற்பத்தியாளர்களுக்கு ஊக அடிப்படையிலான வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் சரக்கு மதிப்பீட்டிற்கு LIFO முறையை அனுமதித்தல் போன்ற பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முத்துவெங்கட்ராம், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 140 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது FIFO மற்றும் Weighted Average Method முறைகளின் அடிப்படையில்தான் வருமான வரி தாக்கல் செய்ய முடிவதாகவும், இதனால் பல தொழில்முனைவோர் தங்களது மூலதனத்தையே பயன்படுத்தி வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே, நகை உற்பத்தித் துறையின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரிச்சட்டங்களில் தேவையான மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், சங்கம் தயாரித்துள்ள கோரிக்கை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் மற்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...