கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிழக்கு மகளிர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை கோவை கிழக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (34), கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாத கோடை விடுமுறை காலத்தில், அவர் வகுப்பில் பயின்று வந்த சில மாணவர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு அவர் தொடர்ந்து ஆபாசப் பதிவுகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவர்களின் செல்போன்களை பெற்றோர் தற்செயலாக சோதனை செய்தபோது, ஆசிரியர் அனுப்பியிருந்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி வளாகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆசிரியர் பாபுவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யப்பட்டதில், மாணவர்களுக்கு ஆபாசப் பதிவுகள் அனுப்பியதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாணவர்களுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியகுற்றச்சாட்டின் பேரில், கோவை கிழக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கோடை விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி டியூஷன் மற்றும் வகுப்புகள் மூலம் நெருக்கமாக பழகிய மாணவர்களைக் குறிவைத்து அவர் இந்தச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...