கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்டு, அதிலிருந்து 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே இன்று காலை ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மினி லாரி ஒன்றை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது நடத்தப்பட்ட சோதனையில், மினி லாரியில் சுமார் 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையில், லாரியில் இருந்ததாகக் கூறப்படும் மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 54-வது வார்டு கொங்கு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், சம்பவம் தொடர்பாக நேரில் பார்வையிட்டார்.

பிடிபட்ட மினி லாரி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடியவர்கள் யார், ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபர்களை அடையாளம் காணும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...