ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செய்து, 88 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்தார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனியில் 1.2 கிலோமீட்டர் நீளத்தில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் துறை அதிகாரிகள் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மேம்பாலப் பணிகள் 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும், ஒப்பந்தப்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்டிருந்தாலும், மக்கள் பயன்பாட்டிற்காக இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



மேலும், பணிகளில் 88 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ரூ.71 கோடி மதிப்பீட்டிற்குள் எந்தவித தரக்குறைவும் இல்லாமல் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சாய்பாபா காலனி பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு காய்கறி சந்தைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்படும் சர்வீஸ் சாலைகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தொடர்பாக எழுந்துள்ள நிலத்தடி நீர் மாசுபாடு குறித்த புகார்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், 40 ஏக்கர் பரப்பளவிலான அந்தப் பகுதியை சீரமைத்து மீண்டும் பசுமை மண்டலமாக மாற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், சிங்காநல்லூரில் மேம்பாலம் அமைப்பதற்கான நிதி ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் மேம்பாலத்தில் மழைநீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...