கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கிறார்கள். முன்னணி வேளாண் நிறுவனங்கள், வங்கிகள், உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் பங்கேற்க அழைக்கப்படுகின்றன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.


Coimbatore: கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நல மையம், வேளாண் துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற திறமையான இளைய தலைமுறையினரை முன்னணி நிறுவனங்களுடன் இணைக்கும் நோக்கில், வரும் ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 2026-ஐ நடத்துகிறது.

கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இரண்டு நாட்கள் இந்த முகாம் நடைபெறும். இந்த வேலைவாய்ப்பு முகாமில், பல்கலைக்கழகத்தின் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளில் இருந்து இளங்கலை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், தொழில்நுட்பம், முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் 2000-க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய ஆர்வத்துடன் பங்கேற்க உள்ளனர்.

திறமையான மற்றும் ஆற்றல்மிக்க புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முன்னணி வேளாண் சார்ந்த நிறுவனங்கள், விதை, உரம் மற்றும் பண்ணை இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், சுய வேளாண் தொழில் முனைவோர் நிறுவனங்கள், முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு முகமைகள் இந்த முகாமைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், தங்களின் வருகையையும் காலிப்பணியிட விவரங்களையும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் நல மைய முதன்மையாளரின் மின்னஞ்சல் முகவரியான [email protected] மூலமாகவோ அல்லது 0422-6611242 என்ற தொலைபேசி எண்ணில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாம், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முன்னணி நிறுவனங்களுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தி, வேளாண் துறையில் தகுதியான பணியாளர்களை நியமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. புதிய சிந்தனைகள் கொண்ட திறமையான மாணவர்களை நேரடியாக நேர்காணல் செய்து தேர்வு செய்யும் வாய்ப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...