நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அளவீடு செய்து ஒப்படைக்கப்படாததால், சொந்த இடத்தில் குடியேற முடியாமல் வாடகை வீடுகளில் வசித்து வருவதாக 330 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மூர்த்தி ரெட்டிபாளையம், சகாயபுரம், நெய்க்காரம்பாளையம், பெரியார் நகர், சத்யா நகர், சாம்பவலசு, கோட்டை மாநகர், கள்ளிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 330 குடும்பங்களுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீரணம்பாளையம் கிராமத்தில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.



ஆனால், பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தும் இதுவரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அளவீடு செய்து ஒப்படைக்கவில்லை என பயனாளிகள் குற்றம்சாட்டினர். இதனால், பட்டா பெற்ற பின்னரும் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் குடியேற முடியாமல், வாடகை வீடுகளில் வசித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே, தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை நிலங்களை உடனடியாக அளவீடு செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, பட்டா பெற்ற பயனாளிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...