கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஜூன் 23 நிலவரப்படி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நல்ல நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.






ஆனைமலையை அடுத்து அமைந்துள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஜூன் 23ஆம் தேதி நிலவரப்படி 60.15 அடியாக நீர்மட்டம் உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 139 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






பொள்ளாச்சியை அடுத்து அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நல்ல நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 16.92 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 103 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 535 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






வால்பாறையை அடுத்து உள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஜூன் 23ஆம் தேதி நிலவரப்படி 66.94 அடியாக நீர்மட்டம் உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 384 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 5 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




விவசாயிகள் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு இந்த நீர்வரத்து மிகவும் உதவியாக இருக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...