கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளின் தற்போதைய நீர்மட்டம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் வரத்தால் ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி 58.4 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 150 கன அடி நீர்வரத்து கிடைத்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 350 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து கிடைத்து வருகிறது. ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி 16.14 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 கன அடி நீர்வரத்து கிடைத்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 495 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வால்பாறை சோலையாறு அணையின் முழு கொள்ளளவு 160 அடி ஆகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் வரத்தால் ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி 69.23 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 172 கன அடி நீர்வரத்து கிடைத்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து சீராக பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது விவசாயிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் வரத்தால் ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி 58.4 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 150 கன அடி நீர்வரத்து கிடைத்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 350 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து கிடைத்து வருகிறது. ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி 16.14 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 கன அடி நீர்வரத்து கிடைத்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 495 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வால்பாறை சோலையாறு அணையின் முழு கொள்ளளவு 160 அடி ஆகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் வரத்தால் ஜூன் 27ஆம் தேதி நிலவரப்படி 69.23 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 172 கன அடி நீர்வரத்து கிடைத்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து சீராக பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது விவசாயிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.