கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்து கிராமங்களிலும் உள்ள பசுக்கள், எருமைகள் மற்றும் 4 மாத கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்தார்.


Coimbatore: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் National Animal Disease Control Programme (NADCP) திட்டத்தின் கீழ் 2026 ஆண்டிற்கான கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசிப் பணி ஜூலை 1, 2026 முதல் ஆகஸ்ட் 10, 2026 வரை 9வது சுற்றாக நடத்தப்பட உள்ளது. இப்பணியின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்தார்.

இத்தடுப்பூசிப் பணி செவ்வனே நடைபெறும் வகையில், நோய்க்கான தடுப்பூசி (Vaccine) Walk in Coolers எனப்படும் குளிரூட்டும் அறைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட நாளில், பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிக் குழுவினர் மூலம் குளிர் சங்கிலி முறையில் (Cold Chain) தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு, தற்போது உள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

கால் மற்றும் வாய் (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளில் சினைப்பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.

மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலத்தில், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்படும் கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றின் மூலம் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஜூலை 1, 2026 முதல் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...