கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனில் பெட்ரோல் கொடுக்க முடியாது எனக் கூறிய பங்க் ஊழியரை தாக்கிய சம்பவம் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், அரசு விதிமுறையின்படி பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, நேற்று இரவு காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த நபர் ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அரசு விதிமுறைகளை காரணம் காட்டி பெட்ரோல் பங்க் ஊழியர் பிரகாஷ் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தன்னை அமைச்சர் சம்பத்குமார் உறவினர் எனக் கூறியபடி, ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் காயமடைந்த பிரகாஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் சம்பத்குமார் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "கோவையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது மாண்புமிகு முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எவ்வித சமரசமும் இன்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்.

பொதுமக்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலாக செயல்படுபவர்களுக்கு இந்த அரசு ஒருபோதும் துணை நிற்காது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், அராஜகத்தை ஒடுக்குவதிலும் அரசு எந்தவித சமரசமும் செய்யாது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...