காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜா (27) மற்றும் கணபதியை சேர்ந்த ஸ்ரீ ஜெயராம் (24) என இருவரை காட்டூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இருவரை காட்டூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் முகசிப்புதூரைச் சேர்ந்த பிரசாந்த் (27), கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள தனது மாமாவுக்குச் சொந்தமான எச்.பி. பெட்ரோல் பங்க்கில் கடந்த ஆறு மாதங்களாக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, பிரசாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் பணியில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்புமாறு கேட்டுள்ளனர்.

ஆனால், பாதுகாப்பு விதிமுறைகளின்படி பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் பெட்ரோல் வழங்க முடியாது என பிரசாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பிரசாந்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பிரசாந்த், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், தாக்குதலுக்கு முன்பு தாங்கள் அமைச்சர் சம்பத் குமாரின் உறவினர்கள் எனக் கூறிக்கொண்டு அந்த வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜா (27) மற்றும் கணபதி பாலாஜி லே-அவுட்டைச் சேர்ந்த ஸ்ரீ ஜெயராம் (24) ஆகியோர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 296(b), 115 (2), 351 (3) பிஎன்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் சம்பத் குமார், தாக்குதல் நடத்தியவர்களுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார். மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...