தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ் 25 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கினார். 2019 முதல் இதுவரை ரூ.17.26 கோடி மானியம் 165 தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வணிக காப்பகம் மூலம் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் Rashtriya Krishi Vikas Yojana - Remunerative Approaches for Agriculture and Allied sectors Rejuvenation -Regional Agribusiness Incubators (RKVY-RAFTAAR-R-ABI) திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு மானியம் வழங்கும் விழா நடைபெற்றது.

08.07.2026 அன்று நடைபெற்ற இவ்விழாவில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மொத்தம் ரூ.83.20 லட்சம் மானியத்தை 25 தொழில் முனைவோர்களுக்கு வழங்கினார். இதில் வேளாண் துளிர் நிறுவனங்களுக்கான SAIP Cohort VI-ன் கீழ் 11 மானியதாரர்களுக்கு ரூ.45.40 லட்சமும், புதிய வேளாண் தொழில் முனைவோர்களுக்கான AOP Cohort VI-ன் கீழ் 10 மானியதாரர்களுக்கு ரூ.30.00 லட்சமும், மாணவர் தொழில் முனைவோர் வழிகாட்டுதல் திட்டமான SOP Cohort-VI-ன் கீழ் 4 மானியதாரர்களுக்கு ரூ.7.80 லட்சமும் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த RKVY-RAFTAAR-R-ABI திட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக இயக்குனரகம் மற்றும் தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் 2019-ல் முதல் செயல்படத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகள் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வேளாண் தொழில் முனைவோர்களுக்கு (AOP) ரூ.5 லட்சம் வரையிலும், வேளாண் துளிர் நிறுவனங்களுக்கு (SAIP) ரூ.25 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.

2019 முதல் இதுவரை மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் மூலம் 165 தொழில் முனைவோர்களுக்கு மொத்தம் ரூ.17.26 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் உரையாற்றிய துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன், இளம் பட்டதாரிகளை வேளாண்மை சார்ந்த தொழிலில் ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். நிலையான மற்றும் இலாபகரமான விவசாய வணிகத்திற்காக புதிய தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்தவும் செயல்படுத்தவும், விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர்களை வழிகாட்டுவதன் அவசியம் குறித்தும் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் Dr.E.சோமசுந்தரம், இயக்குநர், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகம் வரவேற்புரை ஆற்றினார். A.V.ஞானசம்பந்தம், செயல் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, தொழில்நுட்ப வணிக காப்பகம் நன்றியுரை வழங்கினார். பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற தொழில் முனைவோர்கள் தங்கள் மானியத்தை வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காகவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...