நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இரு மாதங்களில் தார் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகவான் கார்டன் பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பகவான் கார்டன் பகுதியில் 2016-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியிருப்பில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இதுவரை தார் சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாகவே இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறுவதால் பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமம் ஏற்படுவதுடன், பள்ளி வாகனங்களும் சேற்றில் சிக்கிக் கொள்வதால் அப்பகுதிக்குள் வருவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக கடந்த 2021 முதல் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தப்படாததை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 20 நாட்களுக்குள் சாலைப் பணிக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் தார் சாலை அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் உறுதியளித்தார்.



இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும், இரண்டு மாதங்களுக்குள் சாலை அமைக்கப்படாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...