பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டைக்காரன்புதூர் அசோக் நகரைச் சேர்ந்த சாலமன், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் ஆழியார் பகுதிகளில் சுமார் 20 ஹோட்டல்களை நடத்தி வருகிறார். மேலும், அவர் டி.இ.எல்.சி. தேவாலய சொத்து பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், காலி மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி, திரி வைத்து அவரது வீட்டு முன்புறம் வீசியதாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்த நிலையில், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சாலமன் அளித்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வால்பாறை சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையில், ஆனைமலை காவல் ஆய்வாளர் சத்தியசீலன் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டைக்காரன்புதூர் அசோக் நகரைச் சேர்ந்த சாலமன், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் ஆழியார் பகுதிகளில் சுமார் 20 ஹோட்டல்களை நடத்தி வருகிறார். மேலும், அவர் டி.இ.எல்.சி. தேவாலய சொத்து பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், காலி மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி, திரி வைத்து அவரது வீட்டு முன்புறம் வீசியதாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்த நிலையில், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சாலமன் அளித்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வால்பாறை சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையில், ஆனைமலை காவல் ஆய்வாளர் சத்தியசீலன் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.