வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மூன்று பேரிடம் கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மூன்று அதிகாரிகள் இச்சோதனையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாளையார் சோதனைச்சாவடியில் தினமும் வணிக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், சோதனைச்சாவடியில்பணியாற்றும் அதிகாரிகள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.




இச்சோதனையின் போது, மோட்டார் வாகன ஆய்வாளர் அருள்தாஸ் மற்றும் அவரது உதவியாளர்களான கல்பனா, பத்மா ஆகியோரிடம் இருந்த கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும்,பறிமுதல் செய்யப்பட்ட இப்பணம் தொடர்பாக உரிய ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடிவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாளையார் சோதனைச்சாவடியில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் எழுந்திருந்த நிலையில், இந்த அதிரடி சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...