கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சுய விவரங்களை பதிவு செய்தனர். ஜூலை 31 வரை Self Enumeration பணி நடைபெறும்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று (17.07.2026) Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில், மாமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்தனர்.




இன்றைய தினம் 17.07.2026 தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை Self Enumeration எனப்படும் சுய கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இந்த பணியின் போது பொதுமக்களிடம் 33 கேள்விகள் கேட்கப்படும். கட்டடம் மற்றும் வீட்டின் விவரங்கள், தண்ணீர் வசதி, மின்சாரம், கழிவறை, டிஜிட்டல் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு மக்கள் தாங்களாகவே பதில்களை பதிவேற்றம் செய்துகொள்ளும் வகையில் Census 2027 வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, கணக்கெடுப்பு பணிக்காக வீடு வீடாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை தருவார்கள். அப்போது SEID ஐடியை தெரிவிக்கும் போது, அதில் விடுபட்டிருக்கும் கேள்விகளை வீடு தேடி வரும் அலுவலர்களிடம் பூர்த்தி செய்துகொள்ளலாம். அதன் மூலம் Census குறித்து அனைத்து தகவல்களும் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்படும்.


முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, "ஒவ்வொரு வீடும் சேர்க்கப்பட வேண்டும். நமது Census, நமது வளர்ச்சி. தங்களின் தகவல் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...