கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சுய விவரங்களை பதிவு செய்தனர். ஜூலை 31 வரை Self Enumeration பணி நடைபெறும்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று (17.07.2026) Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில், மாமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்தனர்.




இன்றைய தினம் 17.07.2026 தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை Self Enumeration எனப்படும் சுய கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இந்த பணியின் போது பொதுமக்களிடம் 33 கேள்விகள் கேட்கப்படும். கட்டடம் மற்றும் வீட்டின் விவரங்கள், தண்ணீர் வசதி, மின்சாரம், கழிவறை, டிஜிட்டல் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு மக்கள் தாங்களாகவே பதில்களை பதிவேற்றம் செய்துகொள்ளும் வகையில் Census 2027 வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, கணக்கெடுப்பு பணிக்காக வீடு வீடாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை தருவார்கள். அப்போது SEID ஐடியை தெரிவிக்கும் போது, அதில் விடுபட்டிருக்கும் கேள்விகளை வீடு தேடி வரும் அலுவலர்களிடம் பூர்த்தி செய்துகொள்ளலாம். அதன் மூலம் Census குறித்து அனைத்து தகவல்களும் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்படும்.


முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, "ஒவ்வொரு வீடும் சேர்க்கப்பட வேண்டும். நமது Census, நமது வளர்ச்சி. தங்களின் தகவல் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...