ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படும் உதவி காவல் ஆய்வாளர் ஜான்சன், அந்த பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளுமாறு தலைமை காவலர் மூலம் பேசிய ஆடியோ வெளியாகி வைரலான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான்சன், ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக வெளியான ஆடியோ பதிவு தொடர்பான புகாரின் எதிரொலியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளத்தொடர்பு தொடர்பான புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த முகேஷ் என்பவரிடம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் பணம் பெற்றது காவல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு தெரிந்ததால், அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்காக, தலைமை காவலர் நாகராஜன் மூலம் முகேஷை தொடர்புகொண்டு, பெற்ற பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு பேசிய தொலைபேசி உரையாடலின் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு நாகராஜன் வலியுறுத்துவதும், தனக்கு பணம் தேவையில்லை, வழக்கில் இருந்து தன்னை விடுவித்தால் போதும் என்று முகேஷ் கூறுவதும் என இருவரும் மாறி மாறி பேசிக்கொள்ளும் ஆடியோ பதிவாகியுள்ளது.

இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமை காவலர் நாகராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் ஜான்சனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிரபுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக காவல்துறையின் துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...