உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உண்டியல் காணிக்கை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் பேரில்,விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்.

கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே அமைந்துள்ள அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயிலில் 9 நிரந்தர உண்டியல்களும், 6 தற்காலிக உண்டியல்களும் உள்ளன. கடந்த ஜூலை 15-ஆம் தேதி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், தற்காலிக உண்டியல்களில் ஒன்றில் இருந்த காணிக்கைத் தொகை கையாடல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதுதொடர்பாக சென்னை இந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்திற்கும் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புகாரின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் ஒரு பகுதியாக, கோயில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகார் மற்றும் ஆய்வு குறித்து துறை ரீதியாக அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...