ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் 28 புதிய எழுத்தாளர்களின் 28 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. இந்த உலக சாதனைக்காக லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் கோயம்புத்தூர், ஞான சஞ்சீவனம் குருகுலம் ஆகியவை இணைந்து நடத்தும் லிங்கன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனைக்கான மாபெரும் புத்தக வெளியீட்டு விழா (25.07.2026) இன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

 நிகழ்விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவை, ஸ்கை நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் ஸ்கை வி.சுந்தரராஜ் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

 அதைத் தொடர்ந்து, புத்தக வெளியீட்டில் ஒரு சாதனை நிகழ்ச்சியாக, “ஞான அவதாரம்” எனும் பொருண்மையில் முதன்முறையாகப் படைப்புகளை வெளியிடும் 28 எழுத்தாளர்கள் எழுதிய 28 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதனோடு இன்னும் சில முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்களும் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் மொத்தமாக 35 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 அதேபோல், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த விருதினைக் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் த.விஸ்வநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் செயலர் மற்றும் கோவை, ரூட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெடின் இயக்குநருமான டாக்டர் கவிதாசன் அவர்கள் “எழுத்து தவம்! வாசிப்பு வரம்! என்னும் தலைப்பில் தன்னம்பிக்கை உரை வழங்கினார். 

 பின்னர், கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம், மெய்ஞ்ஞானப் பேச்சாளர் ஸ்ரீ சசிகுமார் நூல்களுக்கான ஏற்புரை வழங்கினார். 

 நிகழ்வில் முன்னதாக, தமிழ்த்துறை, இணைப்பேராசிரியர் முனைவர் த.விஸ்வநாதன் வரவேற்றார். நிறைவாக, கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம், ஸ்ரீ சசிகுமார் நன்றி கூறினார். நிகழ்வில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...