கோவை மாநகர காவல்துறை (போக்குவரத்து) துணை ஆணையாராக துரை பதவியேற்பு


தமிழகம் முழுவதும் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை  இடமாற்றம் செய்து கடந்த 13-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கோவை மாநகரில் துணை ஆணையராக (போக்குவரத்து) பணியாற்றி வந்த சரவணன் சென்னை பெருநகர தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

கோவை மாநகரின் புதிய துணை ஆணையராக (போக்குவரத்து) துரை நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த துரை-க்கு காவல்துறை அதிகாரிகள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், கோப்புகளில் கையொப்பமிட்ட அவர், கோவை மாநகரின் போக்குவரத்து துணை ஆணையராக பதவியேற்றுக்கொண்டார். 



இதை தொடர்ந்து, அவர் சிம்ப்ளி-சிட்டி க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோயம்புத்தூர் மாவட்டத்தை நன்கு அறிந்தவன் நான். எனது கல்லூரி படிப்பை இங்கு தான் முடித்தேன். போக்குவரத்து சம்பந்தமாக கோவை மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உணரமுடிகிறது.  பொதுமக்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்துவது மட்டுமின்றி, கோவை மாநகரை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக மாற்ற திட்டங்களை செயல்படுத்துவேன். திட்டங்கள் வருங்காலத்தை நோக்கி பயணிப்பதாக இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...