கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த பழனிமுத்து (35) மற்றும் அவரது தந்தை குருநாதன் (60) ஆகிய இருவரை காவல்துறையினர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்றாம்பாளையம் பிரிவு அருகே, தனியார் நிறுவனத்திற்கு அருகிலுள்ள வெற்றிடத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிணத்துக்கடவு காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கைது குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது:

சம்பவ இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த ஜூலை 27ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. அந்த வாகனத்தின் பயணத்தை தொடர்ந்து கண்காணித்ததில், அது பொள்ளாச்சியில் இருந்து வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் பொள்ளாச்சியைச் சேர்ந்த பழனிமுத்து (35) என்பதும், உயிரிழந்தவர் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்த சங்கீதா (30) என்பதும் உறுதி செய்யப்பட்டது.



மேலும், பழனிமுத்துவுக்கும் சங்கீதாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக நெருங்கிய பழக்கம் இருந்து வந்ததாகவும், கடந்த ஆறு மாதங்களாக சங்கீதா வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகமடைந்த பழனிமுத்து, இதுதொடர்பாக அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு கிணத்துக்கடவில் உள்ள தனது வாடகை வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பழனிமுத்து கத்தியால் சங்கீதாவைக் குத்திக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொலைக்குப் பின்னர், தனது தந்தை குருநாதன் (60) உதவியுடன், சங்கீதாவின் உடலை போர்வையில் சுற்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, சென்றாம்பாளையம் பிரிவு அருகே உள்ள காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, சான்றுகளை அழிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, பழனிமுத்து மற்றும் அவரது தந்தை குருநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

120-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணையின் மூலம் மிகக் குறுகிய காலத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி பாராட்டியுள்ளார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...