கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருவதாக தகவல்.

கோவை: கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன், கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி சக மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஆரமுதன், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அரவிந்த், தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சிவா ரோஹித், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த மணிபாலு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணையில், விடுதியில் தங்கி படித்து வந்த அமுதன் உள்ளிட்ட 9 மாணவர்கள் கடந்த 9-ம் தேதி முகமூடி அணிந்து நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று செல்போன்களை திருடியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செல்போன் திருட்டு சம்பவத்தில் அமுதனை அடையாளம் கண்ட மாணவர்கள் அவரை தாக்கியதில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருள் தொடர்பாக அமுதன் புகார் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவி வருவதாகவும், இந்தக் கொலை போதைப்பொருள் தொடர்பானது அல்ல என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் சுமார் 20 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...