கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2030-ஆம் ஆண்டுக்குள் வெறிநோய் இல்லாத நிலையை அடைவதை இலக்காகக் கொண்டு மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் சமூக நாய்களுக்கான வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று (22.08.2026) மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் சுமார் 700 சமூக நாய்களுக்கு Anti-Rabies Vaccination (ARV) செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1,11,074 சமூக நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் இதுவரை சுமார் 8,000 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளான 36, 37, 38 ஆகிய பகுதிகளிலும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளான 8 மற்றும் 54 ஆகிய பகுதிகளிலும் உள்ள சுமார் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்ச எண்ணிக்கையிலான சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும், வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகளுடன், விலங்குகளின் பிறப்பு கட்டுப்பாடு (ABC), தொடர்ச்சியான தடுப்பூசி பணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம், "ஒருங்கிணைந்த நலன் One Health" என்ற அணுகுமுறையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.

எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் வெறிநோய் இல்லாத நிலையை (Zero Rabies by 2030) அடைவதை இலக்காகக் கொண்டு, கோவை மாநகராட்சி தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...