கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோதனைகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவுண்டம்பாளையம், துடியலூர், சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி, வடவள்ளி மற்றும் ரத்தினபுரி பகுதிகளில் நடைபெற்ற நடவடிக்கைகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை மாநகரில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட தொடர் சோதனைகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த நடவடிக்கைகளில் மொத்தம் சுமார் 25 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கவுண்டம்பாளையம்: நல்லாம்பாளையம் தயிர் இட்டேரி ரோடு பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் குறைந்த காலி மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் பிரபு நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்ற ‘பொரிபாலன்’ (30) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3.3 கிலோ கஞ்சா மற்றும் 10 ஜிப்-லாக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

துடியலூர்: மார்க்கெட் ரோடு அரசு மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுகந்தா பெஹரா (35) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.6 கிலோ கஞ்சா, ரூ.1,800 ரொக்கம் மற்றும் 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. கோவையில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

சிங்காநல்லூர்: நீலிக்கோணாம்பாளையம் 43-வது பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பொதுக்கழிவறை பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், வி.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரி என்ற ‘முட்டைகோஸ்’ (22) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, பீளமேடு தொட்டிபாளையம் பிரிவு ஆத்துக்குட்டை பகுதியில் பொதுக்கழிப்பிடம் எதிரே உள்ள திறந்தவெளி மைதானத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் (43) மற்றும் நீலம்பூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ ஹான்ஸ், 2.85 கிலோ விமல் பான் மசாலா மற்றும் 858 கிராம் ஸ்வாகத் என மொத்தம் 21.708 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சரவணம்பட்டி: சங்கனூர் ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 525 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஹான்ஸ், கூல் லிப், விமல், ஸ்வாகத் மற்றும் வி-125 உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடை நடத்தி வந்த ஆரோக்கியசாமி (60) கைது செய்யப்பட்டார்.

வடவள்ளி: அஜ்ஜனூர் சந்திப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் நடைபெற்ற சோதனையில் 495 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரியக்கண்ணன் (20) மற்றும் துண்டைய்யா (26) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ரத்தினபுரி: அமரர் ஜீவானந்தம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 180.52 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடை நடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (33) கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனைக்கு எதிராக மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...