கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து சூலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அருகே பாப்பம்பட்டியில் பயன்பாட்டில் இல்லாத ஹாலோ பிளாக் கட்டிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், பாப்பம்பட்டி நந்தினி நகரில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத ஹாலோ பிளாக் கட்டிடத்தில் அந்த நபரின் உடல் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர்.

சம்பவ இடத்தில் தடயவியல் உள்ளிட்ட தேவையான ஆதாரச் சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போலீசார், முதற்கட்ட விசாரணையில் அவர் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர். மேலும், அவரது உடலில் ஆடைகள் இல்லாத நிலையில் தலையில் காயம் இருந்ததும் தெரியவந்தது.

உயிரிழந்த நபரின் வலது கையில் “RAMESWAR” என்ற வார்த்தை பச்சைக் குத்தப்பட்டிருந்தது. இந்த அடையாளம் மூலம் அவரது அடையாளத்தை கண்டறிய போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து கைது செய்வதற்கும், கொலைக்கான காரணம் மற்றும் பின்னணியை விசாரிப்பதற்கும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சூலூர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...