கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
Coimbatore: கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயந்துள்ளது. இந்த வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் மதுக்கரை காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 5.250 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தார் வடமாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் மண்டல் மகன் மோசம் குமார் (30). இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மோசம் குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Bhavani K. Reddy, IPS அவர்கள் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, IAS அவர்கள் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
மேற்படி உத்தரவின்படி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வழக்கு குற்றவாளியான மோசம் குமார் (30) என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள், கோவை மாவட்ட காவல்துறையின் நிழல் (Nizhal) என்ற QR குறியீடு அடிப்படையிலான பாதுகாப்புத் தளத்தைப் பயன்படுத்தி, தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல்களைப் பகிரலாம். மேலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 00100 ஆகிய எண்களிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் மதுக்கரை காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 5.250 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தார் வடமாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் மண்டல் மகன் மோசம் குமார் (30). இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மோசம் குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Bhavani K. Reddy, IPS அவர்கள் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, IAS அவர்கள் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
மேற்படி உத்தரவின்படி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வழக்கு குற்றவாளியான மோசம் குமார் (30) என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள், கோவை மாவட்ட காவல்துறையின் நிழல் (Nizhal) என்ற QR குறியீடு அடிப்படையிலான பாதுகாப்புத் தளத்தைப் பயன்படுத்தி, தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல்களைப் பகிரலாம். மேலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 00100 ஆகிய எண்களிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.