திருநங்கைகளுக்கு திருநங்கைகளே தொல்லை கொடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவையை சேர்ந்த திருநங்கைகளை பாலியல் தொழிலுக்கு வர சில திருநங்கைகள் வற்புறுத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், ஒத்தகால்மண்டபம் பகுதியை சேர்ந்த திருநங்கை பூர்நித்தா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், திருநங்கைகள் ஜமாத் என்ற அமைப்பில் திருநங்கைகளை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர். அதனால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி திருநங்கைகள் மறுவாழ்வு மற்றும் விழிப்புணர்வு சமூக நலச்சங்கம் என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டு நன்முறையிலான பல பணிகளை திருநங்கைகளாகிய நாங்கள் செய்து வருகிறோம். இருப்பினும், தங்களை பாலியல் தொழிலுக்கு வரவும், எந்தவித புதிய அமைப்பும் தொடங்கக்கூடாது என்றும் கூறி கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. 

தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திம், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...