உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி புதிய வடிவில் உருவாக்கப்பட்ட குப்பை ஏற்றிச் செல்லும் வாகனம் அறிமுகம்

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட தாமு நகர் 65-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள 'சைப்ரஸ் ஓக்' அபார்ட்மெண்டில் குப்பை ஏற்றிச் செல்லும் பேட்டரி வாகனம் மற்றும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை ஏற்றி செல்லும் வாகனத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.



இது குறித்து கோவை மாவட்ட திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர் சுரேஷ் பண்டாரி கூறுகையில்; கோவையில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரிக்கும் வகையில் கோவை மாநகராட்சி சார்பில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பேட்டரி வாகனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த குப்பை ஏற்றும் வாகனம் வீடு வீடாக சென்று குப்பையை தரம்பிரித்து ஏற்றி செல்வதற்கு உதவும்.



அதுமட்டுமல்லாமல், புதிதாக பச்சை மற்றும் நீலம் நிறத்தில் மினி டோர் குப்பை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பச்சை நிறம் வாகனம் மக்கும் குப்பைக்காகவும், நீல நிற வாகனம் மக்காத குப்பைக்காவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பச்சை நிறம் வாகனத்தில் குப்பையை கொட்டுவதற்கு எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது குப்பை தொட்டி நிறைந்த பின்னர், அதனை இந்த வாகனத்தின் பின் புறத்தில் உள்ள லாக் உதவியுடன் பொருத்தப்பட்டு தானியங்கி மூலம் வாகனத்தில் குப்பை கொட்டப்படுகிறது. இந்த புதிய வடிவில் அமைக்கப்பட்ட குப்பை தொட்டியில் 120 லிட்டர் அளவில் கொள்ளளவு உடையதாகவும். நீலம் நிறத்தில் உள்ள வாகனம் சாதாரணமான முறையில் மக்காத குப்பைகளை கேரிபேக் மூலம் கட்டி எடுத்துச் செல்லப்படும். இந்த திட்டம் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றார்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...