மின்சாரம் தாக்கி உயிரிழந்த அண்ணன், தங்கை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவை மாவட்டத்தில் கடந்த புதனன்று பரவலாக கன மழை பெய்தது. இதில, உக்கடம் பகுதியில் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் சல்மான் (18), பானுமா (16) ஆகிய அண்ணன், தங்கைகள் உயிரிழந்தனர்.

அவர்களது உடலை மீட்ட உக்கடம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தோரின் உடலை வாங்க மறத்து அவர்களது உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து, உறவினர்களுடன் கோவை வடக்கு வருவாய்த் துறை கோட்டாட்சியர் சின்னசாமி மற்றும் வடக்கு வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 3 லட்சம் என 6 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...