தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் கோவை மாணவி இரண்டாம் இடம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக தரவரிசைப்பட்டியலில் கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி, 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இளங்கலை வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கோவை சாய்பாபாகாலணி பகுதியை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் பாலாக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர். தரவரிசைப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வேளாண்மை மீது கொண்ட ஆர்வம் காரணமாக வேளாண்மை படிப்பிற்கு விண்ணப்பத்தாகவும் கீர்த்தனா ரவி தெரிவித்தார். அதேசமயம் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி இருப்பதாகவும், அதன் முடிவுகளை பொறுத்து வேளாண்மை படிப்பை தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...