வால்பாறையில் கடும் பனிப்பொழிவு- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறையில் கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் பருவ மழை சரிவர பெய்யாததால் சுற்றுவட்டாரப் பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கின. வால்பாறையை நீராதாரமாகக் கொண்ட பல அணைகளும் வறண்டு காணப்பட்டன. 

குறிப்பாக, கடந்த ஆண்டு வால்பாறை பகுதியில் பருவமழை ஏமாற்றி விட்ட நிலையில், ஆறுகள் வறண்டு விட்டன. குடிதண்ணீருக்குக் கூட பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். வால்பாறை பகுதியில் உள்ள சோலையார் அணை, நல்லார் அணை, பரம்பிக்குளம் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக வால்பாறையில் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்யத் துவங்கியது. இதனிடையே தற்போது குளிர்ந்த காற்றுடன் கடும் பனியும் பொழிந்துவருகிறது.

வால்பாறைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் இன்று காலை ஆழியார் முதல் வால்பாறை சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். வால்பாறை மலையில் உள்ள தேயிலை தோட்டங்களையும் பனிமூட்டம் மூடியுள்ள நிலையில் அதன் பிரமிப்பு மிக்க காட்சியினை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

எஸ்டேட் பகுதிகளில் இரவு, பகல் என கடும் குளிர் நிலவுவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், தொழிலாளர்கள் அதிகாலை நேரத்தில் தேயிலை பறிக்க முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...