நகைக்கடைகளில் நகை சீட்டு திட்டங்களை முறைப்படுத்தக் கோரி அகில பாரத இந்து மகா சபா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு


நகைக்கடைகளில் தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்குவதற்காக நகை சீட்டு என்ற சிறு சேமிப்பு திட்டங்கள் நடத்தப்படுகிறது. இதை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு கடைக்கும் செய்கூலி, சேதாரம் வேறுபடுவதை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என்றும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவையில் பல நகைக்கடைகள் மற்றும் வடிவமைப்பு தொழிலகங்கள் செயல்பட்டு வருகிறது. பல சிறு சேமிப்பு திட்டங்களை அறிவிக்கும் நகைக்கடைகளில் மக்கள் தங்களால் முடிந்த மாதாந்திர தவணை தொகையை செலுத்தி வருகின்றனர். சூழ்நிலை காரணமாக சில நேரத்தில் தவணை தொகையை செலுத்த முடியாத நிர்பந்தம் ஏற்டுகிறது.

இச்சூழலை பயன்படுத்திக்கொள்ளும் நகைக்கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கட்டிய தவணை தொகையினை பல காரணங்கள் கூறி திருப்பி கொடுக்க மறுக்கின்றனர். மேலும், செய்கூலி, சேதாரம் என மக்களிடம் அதிக பணத்தை வசூலிக்கின்றனர்.

தங்க நகைகள் பல ஆண்டுகளாக மக்களின் பாரம்பரிய காலாச்சார வாழ்வியலோடு சேர்ந்தே வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பாக நூதனமான முறையில் மக்களின் பணத்தை சேமிப்பு என்ற முறையில் கொள்ளையடிக்கும் நகைக்கடைகளை கண்காணிக்க ஆய்வுக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மேலும், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நகை விற்பனையை முறைப்படுத்த வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...