கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. மாறாக மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்திற்கு 1 லோடு தண்ணீர் வழங்க 2600 ரூபாய் கொடுக்க வேண்டும் என பதில் கடிதத்தினை நீதிமன்ற நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

நாள் ஒன்றிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குறைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்து செல்லும் நிலையில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்கோடு செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

மாநகராட்சி நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாநகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...