மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணல் விலையேற்றம், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணல் தட்டுபாடின்றி கிடைத்தல், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். விலையேற்றத்தால் வேலை இழப்பு, நலவாரியத்தில் தேங்கி கிடைக்கும் பணபயன் விண்ணபங்களுக்கு காலதாமதமின்றி உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் கூறும்போது, தற்போது மணல் விலை 1 யூனிட்டிற்கு 30,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மணலுக்கு மாற்றாக கட்டிடங்களுக்கு உபயோகிக்கப்படும் எம்.சாண்ட் மணலானது மணல் போல் தரமில்லை. மேலும், கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்து 80 சதவிகிதம் கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, மாநில அரசு இப்பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...