இந்திய விமானப் படையில் வேலை வாய்ப்பிற்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்திய விமானப்படைக்கான ஆள் சேர்ப்பு முகாம் செப்டம்பர் 2017 மாதத்தில் வேலூரில் நடைபெறவுள்ளது. விமானப்படையில் சேர்வதற்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்த விரிவான தகவல்களை www.airmenselection.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். 

மேற்கண்ட பணிக்குச் செல்ல விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அருகிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

தமிழ்நாட்டில் கோவையை தவிர சென்னை, வேலூர், சேலம், திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...