கோவையில் வரும் ஜூன் 18ம் தேதி பலவகை இரகங்களில் நாய் கண்காட்சி நடைபெறுகிறது

ஆனமலைஸ் கென்னல் கிளப் நடத்தும் அனைத்து வகையான 2வது நாய் கண்காட்சியை கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூன் 18ம் தேதி நடக்கிறது. இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் நாய்கள் உள்நாட்டில் மட்டுமின்றி, பலவகையான நாய்கள் வெளிநாடுகளில் இருந்தும் கொண்டுவரப்பட்டு இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. பார்வையாளர்களை பரவசமூட்டும் இந்த கண்காட்சியில் பெயர் பெற்ற பல ரக நாய்கள் இடம்பெறுகின்றன. மிகவும் உயரமான கிரேட் டான் நாய் முதல் மிகவும் சிறிய வகை சிகுவா நாய் இதில் கலந்து கொள்ளவுள்ளது. வெளிநாடுகளில் இருந்து டாய் மினியேச்சர் பிஞ்சர், சைனீஸ் பக், அமெரிக்கன் அகிடா, புல்மாஸ்டிப், டாபர்மேன் பின்ஸ்சர், ஜியன்ட், செயின்ட், பெர்னார்ட், ரோட்வெய்லர், விப்பெட், ஆப்கான் ஹவுன்ட், பீக்லே என பலவகை இரகங்களில் நாய்கள் இடம் பெறுகின்றன. 



இதில், உள்நாட்டு இரகங்களான ராஜபாளையம், கோம்பை, கன்னி, முதோல் ஹவுன்ட், சிப்பிபாரை, ராம்பூர் ஹவுன்ட் போன்றவை இடம்பெறுகின்றன. இவ்வகை நாய்கள் வெளிநாட்டு ரகங்களை விட இவை சிறப்பு வாய்ந்தவை. இக்கண்காட்சியினை ஆனமலைஸ் கென்னல் கிளப் தலைவர் ரவி மற்றும் துணைத் தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெறுகிறது.  

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...