ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை கிராஸ்கட் வீதியில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சட்டமன்றத்தில் வெளிடப்பு செய்யப்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக கோவை கிராஸ்கட் வீதியில் திமுக வடக்கு மாவட்ட மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் அதிமுகவினர் திணறி வருவதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து மறியல் போராட்டம் நடத்திய திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



இதே போன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் குறிச்சி முன்னாள் நகராட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில்  மறியலில் ஈடுபட்ட 36 பேரும் அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக வழகறிஞர் அணியினர் 14 பேரும் கைது செய்யபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...