சாதி ரீதியாக கொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் காதல் ஜோடி காவல்துறை ஆணையரிடம் தஞ்சம்

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த காதல் ஜோடி சாதி ரீதியாக தாங்கள் கொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கோரி கோவை மாநகர இணை ஆணையாளரிடம் தஞ்சம்.

நாமக்கல் மாவட்டம் கடச்சநல்லூரைச் சேர்ந்த சீதாராமனின் மகன் ராம்குமார். மெக்கானிக் பொறியியல் பட்டதாரியான இவர் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் ஆண்களுக்கான ஆடை விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த கவிதா என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் ராம்குமார் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் கவிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பெற்றோர்கள் கவிதாவிற்கு கட்டாயமாக வேரொருவருடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து நேற்றைக்கு வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும் இன்று மருதமலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். கவிதா தனது பெற்றோர்கள் மூலமாக தனது கணவருக்கும் தனக்கும் உயிர்க்கு உத்திரவாதம் இல்லாததால் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...