உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி


உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், அரசு இரத்த வங்கிகள் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விழுப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பல்வேறு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஊர்வலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி அரசு மருத்துவமனையில் நிறைவுற்றது.



பேரணியில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டபடியே ஊர்வலமாக சென்றனர். இது குறித்து மாவட்ட இரத்த வங்கி துறைத் தலைவர் மங்கையர்கரசி கூறும்போது, மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து காலங்களில் எவ்வித தங்கு தடையுமின்றி இரத்தம் கிடைக்க பெறும். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேரணி நடைபெறுகிறது.



மேலும், ஒரு யூனிட் இரத்தம் 4 உயிர்களை காப்பாற்ற உதவும். மாதம் 1000 யூனிட் இரத்தம் கொடையாளர்கள் வழங்குவதால் வருடம் தோறும் 12 ஆயிரம் யூனிட் இரத்தம் பெறப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மக்கள் தொகையில் ஒரு சதவிகித மக்கள் இரத்தம் வழங்க முன்வந்தாலே தேவைகள் பூர்த்தி அடையும்" என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...