மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு புதியதாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு 18 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருபதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள், பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் பிரெயில் தட்டச்சு இயந்திரங்களுக்கு 18 சதவிகிதம் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். பார்வையற்றோருக்கான பிரெயில் கடிகாரங்கள், காகிதங்கள், காது கேளாதோருக்கான காதொலி கருவி போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 12 சதவிகித வரி மற்றும் உடல் ஊனமுற்றோர் பயன்படுத்தும் ஊன்றுகோல், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், செயற்கை கால்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவிகித வரியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை முழக்கமிட்டனர்.

மேலும், திரைப்படம், தங்க நகை போன்றவற்றிற்கு விதித்த ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்ததைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களின் வரியையும் குறைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...