காவல்துறையினரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணவன், மனைவி புகார்

புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பட்டான், இவரது மனைவி கமலா. இவர்களுக்கு தங்கராஜ், செந்தில்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தங்கராஜ்-க்கும் ஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே, தங்கராஜ்-க்கும், அவருடன் பணியாற்றி வந்த கோகிலா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் மாயமாகிய நிலையில், தங்கராஜை தேடிவரும் அன்னூர் போலீசார் பட்டானையும், அவரது குடும்பத்தினரையும் கண்மூடித்தனமாக தாக்குவதாக குற்றம்சாட்டி இன்று கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 



இது குறித்து பட்டான் கூறியதாவது:- எனது மகன் மாயமானது முதல் தினமும் நள்ளிரவில் போலீசார் எங்கள் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் இருக்கும் என்னையும், எனது இளைய மகன் செந்தில்குமாரையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர்.

போலீசார் தாக்கியதில் எனது இடது கண்ணில் குறைபாடு ஏற்பட்டுவிட்டது. மேலும், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் எனது இளைய மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் இதுவரை விடுவிக்கவில்லை. தங்கராஜ் இருக்கும் இடத்தை கேட்டு அடித்து கொடுமைப் படுத்திவருகின்றனர். தங்கராஜ் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது என்று கூறினாலும், அதனை போலீசார் நம்பாமல், எனது அண்ணன் மகன் உட்பட அனைவரையும் விசாரணை என்ற பெயரில் கூட்டிச்சென்று அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.



இந்த பிரச்சனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்".  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...