பயிற்சி வகுப்பு நடத்த முறையான திட்டமிடல் இல்லை என்று கோவை அரசு மருத்துவமனை முன்பு உதவி மருத்துவர்கள் தர்ணா

பயிற்சி வகுப்புக்கு முறையான திட்டமிடல் இல்லாமல் தங்களை சிரமப்படுத்துவதாகக் கூறி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து கோவை அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.



108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவி மருத்துவர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை புத்துணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு இன்றும், நாளையும் பயிற்சி வகுப்பு நடத்த கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவித்திருந்த பயிற்சி வகுப்பு மதியம் வரையில் தொடங்கப்படவில்லை. இதனால், இந்த பயிற்சி வகுப்புக்கு வந்திருந்த 60-க்கும் மேற்பட்டோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும், மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு தங்கும் இடத்தை கூட ஏற்பாடு செய்து தரவில்லை என்றும், போதிய அடிப்படை வசதிகள் கூட செய்து தராததால் பெண் உதவி மருத்துவர்கள் அவதியுற்றனர் என்றும் கூறி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ரயில்நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப்-யில் அவர்களுக்கான பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த தர்ணா போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...