கோவையில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து கோவை முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்பவ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை டவுண்ஹால் பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்த இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதை தொடந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்க அனுமதிக்குமாறு காவல் துறையினரிடம் மறையிட்டனர். 

ஆனால், காவல் துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் இந்திய மாணவர் சங்கத்தினர் நுழைய முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளை காவல் துறையினர் கைது செய்தனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக டவுண்ஹால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...