கோவையில் மாட்டு தலையுடன் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் பேரவையினர் கைது

மத்திய அரசு மிருகவதை சட்டத்தில் திருத்தம் செய்து புதிய உத்தரவு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. அந்த உத்தரவின்படி, நாடு முழுவதும் இனி மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசின் இந்த திடீர் உத்தரவால் நாடெங்கிலும் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. பல கட்சி தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவித்தும் வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடகா அரசுகள் கடுமையான எதிர்ப்பினை நேரடியாக பதிவு செய்தன.



இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, சிலர் மாட்டின் தலையுடன் வந்து மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் மாட்டு தலையை பறிமுதல் செய்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...