குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதைக் கண்டித்து சுக்கரவார்பேட்டை பகுதி மக்கள் ஆட்சியரிடம் புகார்

குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதைக் கண்டித்தும், அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையிலும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் சுக்கரவார்பேட்டை பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று முறையிட்டனர்.

கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரை குடிக்க நேரிடும் சூழலால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மேலும், 2000-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

முன்னதாக, சுக்கரவார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து அதை எடுத்து வந்து, முறையாக குடிநீர் வழங்கவும், குடிநீர் பிரச்சனையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...