ஓய்வு பெற்ற சப்-கலெக்டர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(60). ஓய்வு பெற்ற சப்-கலெக்டரான இவர் கடந்த 14ம் தேதி கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது குடும்பத்துடன் சென்றார்.  நிகழ்ச்சி முடிந்த பின்னர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரன் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 18 பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலிகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து, சந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்படாததால் அருகில் இருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ததில் ஒரு கைரேகை கண்டெடுக்கப்பட்டது.  இந்த கைரேகையை பிற குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...