பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாகக் கூறி கோவை மத்திய சிறையில் மாவோயிஸ்ட்டுகள் உண்ணாவிரதம்


கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்ட்டுகள் 5 பேரை தமிழக கேரள கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது போலி சிம் கார்டு, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கேரள மற்றும் ஆந்திராவிலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதல் கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ள மாவோயிஸ்ட்டு இயக்கத்தினை சேர்ந்த அனூப்பை சந்திக்க கடந்த வாரம் சிறைச்சாலைக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் மற்றும் சர்மா ஆகியோர் வந்திருந்தனர். அப்போது, அவர்கள் சிறை விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்றதாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதனைக்கண்டித்து மத்திய சிறையில் உள்ள அனூப் மற்றும் வீரமணி ஆகியோர் மத்திய சிறைசாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...