மண் சட்டிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்

கோவை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி வண்டல் மண் சட்டிகளுடன் வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அதில் "கோவை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மற்றும் கிராவல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற நீர் நிலைகளிலும் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்டத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தால் விவசாயிகள் பயனடைவார்கள். நீர் நிலைகளும் தூர்வாரப்படும்' என்றார். 

முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாய சங்கத்தினர் கையில் வண்டல் மண் சட்டியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...