மக்கள் சேவை மையம் சார்பில் பெண்களுக்கான பூத்தொடுக்கும் போட்டி மற்றும் சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி

மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் மக்கள் சேவை மையம் தொடங்கப்பட்டது.



இந்நிலையில், இம்மையத்தின் சார்பில் பெண்களுக்கான பூத்தொடுக்கும் போட்டி மற்றும் சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.



பாஜக-வின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100-க்கும்  மேற்பட்ட பெண்கள் பூத்தொடுக்கும் போட்டியில் பங்கேற்றனர். பின்னர், கனரா வங்கி சார்பில் பெண்களுக்கான சிறு தொழில் கடனுதவி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பெண்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணரும் விதமாக இன்று பூத்தொடுக்கும் போட்டி நடைபெறுகிறது. மனதை ஒருநிலைப்படுத்தும் விதமான இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும் பெண்கள், தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுகின்றனர். போட்டியில் வெற்றி பெரும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.



தொடர்ந்து, கனரா வங்கியின் சார்பில் பெண்களுக்கு சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது சிறு தொழில்முனையும் பெண்களை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...